Tuesday, May 18, 2010

பிரம்மரிஷி - வசிஷ்டர்

ஆதிவசிஷ்டரை பிரம்ம தேவரின் மனுபுத்திரன் என்று சொல்லுகிறார்கள் . முதலில் பிரம்மரிஷி வசிஷ்டர் பிரம்மதேவரின் மூச்சிலிருந்து தோன்றினார் . அடுத்து பிரம்மாவால் உருவாக்கப்பட்ட அக்னியிலிருந்து வசிஷ்டர் தோன்றினார் . மூன்றாவது முறையாக ஊர்வசியின் அழகில் மயங்கிய வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்து தோன்றினார் . வசிஷ்டர் , கர்தாம் என்பவரின் மகள், கபிலரின் சகோதரியுமான அருந்ததியை மணந்து கொண்டார் . கணவனையே உலகமென்று நினைத்து வாழ்பவளை அருந்ததி என்று அழைக்கலாம் . இத்தகைய நல்ல குணங்களைக் கொண்ட அருந்ததி வானத்தில் நட்சத்திரமாகத் திகழ்கிறாள் .
திருமணமான புதிய தம்பதியர்கள் சந்தோசமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது வழக்கமாகும் . வசிஷ்டருக்கும் நிமி அரசருக்கும் சிறிய வாக்குவாதம் நடந்தது . இதனால் வசிஷ்டர் சூரிய வம்சத்திலிருந்து விலகிக் கொண்டு இச்சவாகு வம்சத்தின் பூசாரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வசிஷ்டர் தசரத மகாராஜாவிற்கு புத்திரபாக்கிய யாகத்தை நடத்தி வைத்தார் . வசிஷ்டர் தசரதரின் முதல் புத்திரன் ஸ்ரீராமருக்கு குருவாக இருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் .
வசிஷ்டர் , விஷ்வாமித்திரருக்கு இடையே சிறிய போராட்டம் நடந்தது . வசிஷ்டர் வாயால் தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று விஷ்வாமித்திரர் ஆசைப்பட்டார் . விஷ்வாமித்திரர், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நந்தினி பசுவையை நாடினார் . ஆனால் வசிஷ்டர் நந்தினியை ஆஸ்ரம யாகத்திற்காக அனுப்பி வைத்தார் . எதற்கும் மசியாத வசிஷ்டரை அழிக்க விஷவாமித்திரர் ஆயுதத்தோடு அவருடைய குடிசைக்கு இரவு வேளையில் நுழைந்தார் . அப்போது வசிஷ்டர் அருந்ததியிடம் விஷ்வாமித்திரரின் சிறப்பை சொல்லிக் கொண்டார் .
தன்மீது உயர்ந்த எண்ணத்தைக் கொண்ட வசிஷ்டரை அழிக்க நினைத்ததை எண்ணி மன வேதனைப்பட்டார் . உடனே வசிஷ்டரின் பாதங்களில் விழுந்தார் . வசிஷ்டரும் விஷ்வாமித்திரரை தழுவிக் கொண்டு அவரை பிரம்மரிஷி என்று அழைத்தார் . யோக வசிஷ்டர் ராமாயணம் , ஸ்ரீராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை பற்றிச் சொல்லுகிறது . பிரம்மரிஷி வசிஷ்டரும் சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப் படுகிறார் .

Sunday, May 16, 2010

தேவரிஷி - நாரதர்


கையில் வீணை , நீண்ட சுருள்சுருளான முடி , சந்தனக் கட்டை காலணிகள் , எப்போதும் நாராயண நாமத்தை உச்சரிக்கும் தேவரிஷி நாரதரின் தோற்றத்தைப் பற்றி பல காவியங்களின் மூலம் படித்திருக்கிறோம் . தேவரிஷி நாரதர் முதலில் உபப்ரஹன் என்ற கந்தர்வராக பிறந்தார் .
உபப்ரஹன் உடைய தோற்றம் தேவலோகத்து அப்சரைகளின் அழகிய தோற்றம் போல இருந்தது . பிரம்மதேவர் தர்பாரில் அப்சரைகளின் இசை , நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் உபப்ரஹனும் அப்சைரையாக மாறி அவர்களோடு இணைந்து நடனமாடினார் . இதை அறிந்த பிரம்மதேவர் கோபம் கொண்டு அடுத்த பிறவியில் கீழ்ஜாதியில் உபப்ரஹன் பிறவி எடுக்க வேண்டுமென்று சாபம் கொடுத்தார் . அடுத்த பிறவியில் உபப்ரஹன் ஏழையான வேலைக்காரக் குடும்பத்தில் பிறந்தார் .
ஐந்து வயதை அடைந்த அந்தக் குழந்தை பெற்றவரை மதித்து, ஏழ்மையில் இருந்தாலும் தன்னை நாடி வரும் துறவிகளுக்கும், சாதுக்களுக்கும் அன்போடு உணவளித்து உபசரித்தான் . சாதுக்களும் , துறவிகளும் மிச்சம் வைத்து விட்டுப்போன உணவை சாப்பிட்டான் . சிறுவனின் சேவையைக் கண்டு மெய்சிலிர்த்த சாதுக்கள் அவனுக்கு மந்திரத்தையும் , தியானத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் .
திடீரென்று அந்தச் சிறுவனின் தாயார் பாம்புக் கடியால் மரணம் அடைந்தாள் . தாயை இழந்த சிறுவன் ஊர் ஊராக அலைந்து திரிந்தான் . ஒருநாள் ஆலமரத்தடியில் அமர்ந்து சிறுவன் தியானத்திலிருந்த போது அவனுடைய மனதில் மகாவிஷ்ணு தோன்றித் தோன்றி மறைந்தார் . அந்தச் சிறுவனுக்கு பகவானை நேரில் காண வேண்டுமென்ற ஆசை பிறந்தது . அந்தச் சிறுவன் இப்பிறவியில் பகவானைப் பார்க்க முடியாது என்ற அசரீரியின் குரலைக் கேட்டான் . காலப்போக்கில் சிறுவனின் உடலில் இருந்து பிரிந்த ஆத்மா பிரம்மனுடன் கலந்து தேவரிஷி நாரதராக மூன்றாவது பிறவி எடுத்தார் .
நாரதர் இப்ருகு முனிவரின் மகள் லக்ஷ்மியை மகாவிஷ்ணுவிற்கு திருமண செய்து கொடுத்தார் . இந்தரனின் ஒப்புதலோடு ஊர்வசி புருவர் திருமணத்தை முடித்தார் . நாரதரின் தூண்டுகோலால் வால்மீகி ராமாயணத்தையும் , வியாசர் மகாபாரதத்தையும் படைத்தார்கள் . நாரதரின் உதவியால் துருவனும் , பிரகலாதனும் மேதைகள் ஆனார்கள் . நாரதரே , இந்திரன் , சந்திரன் , மகாவிஷ்ணு , சிவபெருமான் , தருமர் , ஸ்ரீராமர் , கிருஷ்ணபரமாத்மா ஆகியவர்களுக்கு வழிகாட்டியாகவும் , குருவாகவும் இருந்தார் . நாரதரை சாஸ்திரங்கள் , சுருதி , ஸ்ம்ரிதி , இதிகாசம் , புராணங்கள் , வேதங்கள் , இசை , பூகோளம் , கணிதம் , ஜோதிடம் , யோகா ஆகிய சகல வித்தைகளிலும் திறமைசாலி என்று சொல்லலாம் . நாரத புராணத்திலுள்ள நாரத பஞ்சராத்திரி , நாரதரின் சிறப்பைப் பற்றி சொல்லுகிறது . ராமாயணமும் , மகாபாரதமும் தேவரிஷி நாரதரின் பக்தி பெருமையைப் பற்றி சொல்கின்றன .