ஒரு சமயம் குருநானக் "வை " என்ற நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென்று புதிய அனுபவம் அவருக்குள்ளே ஏற்பட்டது . அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவர் காணாமல் போனார் . அதன் பிறகு தோன்றிய போது அவருடைய முகத்தில் திவ்ய ஒளி ஒன்று தென்பட்டது . அவருக்குள்ளே ஒருவித ஆன்மீக சக்தியொன்று பிறந்தது . குருநானக் எந்நேரமும் பகவானின் நாமத்தை அதாவது நாமஸ்மரன் உச்சரித்து கொண்டிருந்தார் . குருநானக் இந்த நாமஸ்மரனை மக்களிடம் பரப்பினார் . குருநானக் முப்பது வயதில் பல இடங்களுக்குப் பயணம் செய்தார் . மக்களுடைய மூடநம்பிக்கையை அகற்றி குருநானக் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதித்தார் . ஜாதி , மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்றார் . 1539 ஆம் ஆண்டில் குருநானக் ஆத்மா ஸ்வரூபமாக தன்னுடைய வேலைக்காரன் உடலுக்குள் ஐக்கியமானார். அவனுடைய உடலில் இருந்து ஓர் ஒளியாக மாறி வானத்தில் மறைந்தார் . குருநானக் மறையும் தருணத்தில் ஓம் சத்யஸ்ரீ அகால் என்ற புனித நூலை சொல்லிக் கொண்டே மறைந்தார் . சீக்கியர்களின் மத குருவான குருநானக் "குரு கிரந்த் சாஹிப் " என்ற நூலை இயற்றினார். இன்றும் சீக்கியர்கள் இந்த கிரந்தத்தை கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள் .
Tuesday, July 6, 2010
குருநானக்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment