Thursday, July 1, 2010

மகரிஷி ததீச்சர்

அதர்வ ரிஷி, சிட்டி தம்பதியருக்கு ததீச்சர் மகனாக பிறந்தார் . அகஸ்தியரின் மனைவி லோபமுத்ராவின் சகோதரி காபஸ்தினியை மணந்து கொண்டார் . மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவை கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள் .

ஒருவர் கேட்கும் போது கற்றுக் கொண்ட வித்யாவை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணை செல்வதென்று ததீச்சர் கருதினார் . இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி குமாரர்கள் ததீச்ச்சரின் தலையை எடுத்து அவருக்கு குதிரைத் தலையை பொருந்தினார்கள். அதன் பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி குமாரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் .

இதை அறிந்த இந்திரன் கோபம் கொண்டு ததீச்ச்சரின் குதிரை தலையை வெட்டி எறிந்தார் . அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு மீண்டும் அவருடைய தலையை பொருந்தினார்கள் . இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றோரு பெயரால் அழைக்கப்படுகிறார் . மகரிஷி ததீச்சர் தகஷ் மகாராஜா நடத்தும் யாகத்திற்கு மருமகன் சிவபெருமானை அழைக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் . தகஷானோ மகரிஷியின் வேண்டுகோளை அவமதித்ததால் ததீச்சர் யாகத்தை விட்டு வெளியேறினார் .

இந்திரனுக்கும் பிரகஸ்பதிக்கும் மனபேதம் தோன்றியது . இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு அசுரர்கள் தேவர்களைத் தாக்கினார்கள் . அசுரர்களுக்கு பயந்து இந்திரன் பிரம்மனிடம் அடைக்கலமடைந்தார். அந்த அராஜகத்தை ஒழிக்க பிரம்மன் தவ்ஸ்தனின் மகன் விஸ்வரூபனை பூசாரியாக தோற்றுவித்து யாகத்தை நடத்தினார் . விஸ்வரூபனின் தாயார் அசுர பரம்பரையைச் சார்ந்தவர் .

விஸ்வரூபன் யாகத்தின் பிரசாதத்தை தாயாருக்கு கொடுத்தார் . விஸ்வரூபன் கொடுத்த பிரசாதத்தை அவனுடைய தாயார் சாப்பிட்டவுடன் அசுரர்களின் பலம் கூடியது . இதை அறிந்த இந்திரன் விஸ்வரூபனை கொன்றான் . மகன் இறந்த செய்தியை அறிந்த தவ்ஸ்தன் வரத்தா என்கிற அசுரனை உருவாக்கினார் . அவனுடைய கொடுமையை தாங்க முடியாமல் இந்திரன் பிரகஸ்பதியின் உதவியை நாடினார் . பிரகஸ்பதி ததீச்சரின் எலும்பினால் உருவாக்கப்பட்ட வஜ்ராயூதத்தால் அந்த அசுரன் கொல்லப்படுவான் என்ற பரிகாரத்தை சொன்னார் .

இந்திரன் ததீச்சரைத் தேடி நைமிசாரன்யத்திற்கு சென்றார் . இந்திரன் ததீச்சரிடம் அவருடைய எலும்பை தானமாக கேட்டார் . ததீச்சரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இந்திரன் அவருடைய எலும்பை பெற்றுக் கொண்டார் . இந்திரன் ததீச்சரின் லும்பினால் வஜ்ரா யூதத்தை உருவாக்கி வரத்தா அசுரனைக் கொன்றார் .

No comments:

Post a Comment