Tuesday, July 6, 2010

ஆசார்யா சாணக்கியர்

வால்மீகி , வேதவியாசர் ஞானிகளுக்கு பிறகு சாணக்கியரையும் ஞானி என்று வரலாறு குறிப்பிடுகிறது . சாணக்கியர், சிவப்பு கண்களும், கறுப்பு நிறமும் , விகாரமான தோற்றத்தைக் கொண்டவர் என்று சொல்லலாம் . சாணக்கியரின் உண்மையான பெயர் விஷ்ணுகுப்தா என்றும், அவர் சனகா என்ற பிராமணனுக்கு பிறந்ததால் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டார் . ஆசார்யா சாணக்கியர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்னால் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . சாணக்கியர் வேதங்கள், கணிதம் , ஆயுர்வேதம் , யுத்தகலை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார் . சாணக்கியரை தலைசிறந்த அறிவாளி என்றும் , அடிக்கடி கோபம் கொள்பவர் என்றும் , தைரியசாலி என்றும் , திறமையான நிர்வாகி என்றும் சொல்லலாம் .

முன்பு மகத நாட்டை நந்த பரம்பரையினர் ஆண்டு வந்தார்கள் . கீழ்சாதியான நந்த பரம்பரையினர் பிராமணர்களை இழுவுப்படுத்தினார்கள் . அப்போது ஆண்டு வந்த தன்நந்து என்ற அரசன் சாணக்கியரை தன்னுடைய தர்பாரில் அழைத்து அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் , அவரை சிறைவாசம் வைத்தான் . அவனுடைய கொடுமைகளைத் தாள முடியாமல் அவனை ஒழித்து அதே அரச தர்பாரில் இன்னொருவரை உட்கார வைக்க வேண்டுமென்று கங்கணம் செய்து கொண்டு தன்னுடைய முடியை முடித்து வைத்துக் கொண்டார் . அப்போதுதான் சாணக்கியர் சந்திரகுப்தாவை சந்தித்தார் . சந்திரகுப்தாவின் உதவியால் நந்த பரம்பரையின் அரசனான தன்நந்துவை அழித்து , சந்திரகுப்தாவிடம் ராஜதர்பாரை ஒப்படைத்தார் . நந்த பரம்பரையை விரட்டி அடித்து மௌர்யா பரம்பரையை உருவாக்கினார் . சாணக்கியர் சந்திரகுப்தாவின் சிறந்த அறிவுரையாளராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார் .

சாணக்கியரின் உதவியால் சந்திரகுப்த மௌர்யா அந்த நாட்டை 24 வருடங்கள் ஆண்டார் . சாணக்கியர் புகழ் பெற்ற அர்த்தசாஸ்திரம் என்ற தத்துவத்தை உருவாக்கினார் . மேலும் ஜோதிடத்தில் விஷ்ணுகுப்த சித்தாந்தத்தையும், ஆயுர்வேதத்தில் வைத்தியஜீவன் என்ற புத்தகத்தை எழுதினார் . சந்திரகுப்த காலத்திற்கு பிறகு சாணக்கியர் சந்நியாசத்தைக் கைப்பற்றினார் என்று தெரிய வருகிறது .

No comments:

Post a Comment