Tuesday, July 6, 2010

குருநானக்

காலுவேதி - த்ருப்தாஜி தம்பதியருக்கு கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியன்று தல்வந்தி கிராமத்தில் குருநானக் பிறந்தார் . குழந்தைப் பருவத்திலே குருநானக் அதிக நேரம் தியானத்தில் மூழ்கினார் . அந்தச் சின்ன வயதிலேயே குருநானக் பஜனைகளை நிகழ்த்தினார். ஏழை , எளியவர்களுக்கு தன்னிடமிருந்ததை கொடுத்து உதவினார் . கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் வேதங்களிலும் , புராணங்களிலும் ஆர்வத்தைக் காட்டினார் . பண்டித் பிரிஜ்நாத் என்பவரின் மூலம் வேத சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார். அந்தச் சின்ன வயதிலே மக்களின் நலத்தில் ஆர்வம் காட்டிய குருநானக் தனக்காக எதையும் யோசிக்காமல் மக்களுக்காகவே உழைத்தார் . குருநானக் மூல்சந்த் என்பவரின் மகளான சுலாகினியை மணந்து கொண்டார் .
ஒரு சமயம் குருநானக் "வை " என்ற நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென்று புதிய அனுபவம் அவருக்குள்ளே ஏற்பட்டது . அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவர் காணாமல் போனார் . அதன் பிறகு தோன்றிய போது அவருடைய முகத்தில் திவ்ய ஒளி ஒன்று தென்பட்டது . அவருக்குள்ளே ஒருவித ஆன்மீக சக்தியொன்று பிறந்தது . குருநானக் எந்நேரமும் பகவானின் நாமத்தை அதாவது நாமஸ்மரன் உச்சரித்து கொண்டிருந்தார் . குருநானக் இந்த நாமஸ்மரனை மக்களிடம் பரப்பினார் . குருநானக் முப்பது வயதில் பல இடங்களுக்குப் பயணம் செய்தார் . மக்களுடைய மூடநம்பிக்கையை அகற்றி குருநானக் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதித்தார் . ஜாதி , மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்றார் . 1539 ஆம் ஆண்டில் குருநானக் ஆத்மா ஸ்வரூபமாக தன்னுடைய வேலைக்காரன் உடலுக்குள் ஐக்கியமானார். அவனுடைய உடலில் இருந்து ஓர் ஒளியாக மாறி வானத்தில் மறைந்தார் . குருநானக் மறையும் தருணத்தில் ஓம் சத்யஸ்ரீ அகால் என்ற புனித நூலை சொல்லிக் கொண்டே மறைந்தார் . சீக்கியர்களின் மத குருவான குருநானக் "குரு கிரந்த் சாஹிப் " என்ற நூலை இயற்றினார். இன்றும் சீக்கியர்கள் இந்த கிரந்தத்தை கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள் .

No comments:

Post a Comment