Tuesday, July 6, 2010

சைதன்ய மகாபிரபு

1486 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் உள்ள நவதீப் என்ற இடத்தில் சைதன்ய மகாபிரபு பிறந்தார் . ஆன்மீகவாதியான ஜகன்நாத் மிஸ்ரா - சாக் ஷி தேவிக்கு மகனாக பிறந்தார் . சைதன்யாவின் முதல் சகோதரர் விஸ்வரூப் சன்யாசம் வாங்கிக் கொண்டார் . சைதன்ய மகாபிரபு குழந்தைப் பருவத்தில் விச்வாம்பர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார் . அவரை மக்கள் செல்லமாக நிமாய் என்றும் அழைத்தார்கள் .

குழந்தைப் பருவத்தில் அவர் படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்தார். அவர் 12 வது வயதில் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றார் . அப்போது தான் அவருடைய தந்தை மரணம் அடை ந்தார். அதன் பிறகு அவர் பண்டித் வல்லபாசாராவிடம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக் கொண்டார் . அந்தச் சமயத்தில் தன்னுடைய குருவின் மகளான லக்ஷ்மியை மணந்து கொண்டார் . சைதன்ய மகாபிரபு தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு சம்ஸ்கிருத பாடசாலையைத் தொடங்கினார் . அந்தப் பாடசாலை நாளடைவில் வளர்ச்சி பெற்றதால் சைதன்யா அந்தப் பாடசாலை மீது முழு கவனத்தை செலுத்தினார் . குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாததால் அவருடைய மனைவி லக்ஷ்மி திடீரென்று மரணமடைந்தார் .

தன்னுடைய அன்னையின் வற்புறுத்தலால் மீண்டும் சைதன்யா விஷ்ணுப்ரியா என்பவரை மணந்து கொண்டார் . ஒரு சமயம் சைதன்யா காயா சென்ற போது மாபெரும் தபஸ்வியை சந்தித்தார். அவரிடமிருந்து மந்திரங்களைக் கற்று கொண்டார் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது சைதன்யாவிடம் மாற்றங்கள் தோன்றின . அவர் நீண்ட நேரம் தியானம் செய்யத் தொடங்கினார் .

சைதன்யா அனுதினமும் கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து , அவர்மீது மோகம் கொண்டு பக்தி கானங்கள் பாடினார் . 1510 ஆம் ஆண்டில் சைதன்யா சந்நியாசம் எடுத்துக் கொண்டார் . பதினெட்டு வருடங்களுக்கு சைதன்யா ஜகன்நாத்பூரியில் தஞ்சமடைந்தார் . ஒரு நாள் ஜகன்நாதர் சின்ன மூர்த்தியை அரவணைத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆத்மா பிரிந்து , அந்தச் சின்ன மூர்த்தியோடு கலந்தது . ராதா - கிருஷ்ண மீது பல பாடல்களை இயற்றிய சைதன்ய மகாபிரபு என்றும் நம்முடைய நினைவில் இருந்துகொண்டே இருக்கிறார் .

No comments:

Post a Comment