Tuesday, July 6, 2010

மகரிஷி வேதவியாசர்

வஷிஷ்டரின் மகனான சக்தி , சக்தியின் மகன் பராசரர் ரிஷிக்கும் மதச்யகந்தாவிர்க்கும் பிறந்தவர் வேதவியாசர் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன . வேத வியாசர் கறுப்பாக இருந்ததால் அவரை கிருஷ்ணா என்றும் , த்வாபயன் என்ற தீவில் ஜனனம் எடுத்ததால் வியாசர், கிருஷ்ண த்வாபயன் என்றும் அழைக்கப்பட்டார் . முன்காலத்தில் வேதங்களிலுள்ள பல ஸ்லோகங்கள் வெவ்வேறு இடத்திலுள்ள ரிஷிகளிடம் இருந்து வந்தன . வேத வியாசர் அனைத்து ஸ்லோகங்களையும் ஒன்றாகத் திரட்டி வேதங்களை நான்கு வகைகளாக பிரித்து அவைகளை ரிக் , யஜுர், சாம , அதர்வண வேதங்கள் என்று குறிப்பிட்டார் .

வேதவியாசர் பத்ரி என்ற காட்டிற்குள் பல வருடங்கள் தவம் புரிந்ததால் அவருக்கு பத்ராயன் என்ற பெயரும் சூட்டப்பட்டது . வேதவியாசர் சிறந்த கவிஞர் என்பதால் இவர் பக்தகாவி என்ற நூலை இயற்றினார். பிரம்ம சூத்ரம் , அத்யாத்ம ராமாயணம் , சிறப்பு மிக்க மகாபாரத காவியமும் வேத வியாசரால் எழுதப்பட்டவை என்று சொல்லலாம் .

No comments:

Post a Comment